ட்ரம்பின் புதிய திட்டம்.. பிரித்தானிய அரசியல் களத்தில் குழப்பநிலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு திட்டமானது பிரித்தானிய அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ட்ரம்ப், ஐரோப்பா “நாகரிக அழிவை” சந்திக்கிறது என்றும், அதன் அரசியல் திசைக்கு எதிராக நிற்க வேண்டும் என்றும் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் காரணமாக, பிரித்தானிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
லிபரல் டெமோக்ராட் தலைவர் சர் எட் டேவி, ட்ரம்ப் “அதிகப்படியான தலையீடு” செய்கிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல அரசியல் ஆய்வாளர்கள், ட்ரம்பின் ஆவணங்கள் ரஷ்யாவின் பிரச்சார பேச்சுகளை ஒத்திருக்கின்றன என எச்சரித்துள்ளனர்.
ட்ரம்பின் கருத்து
ட்ரம்ப், ஐரோப்பிய தலைவர்களை “பலவீனமானவர்கள்” என விமர்சித்ததால், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
அவர், அமெரிக்காவை நேரடியாக எதிர்கொள்ள வேண்டுமா அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா என்ற சிக்கலில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம், நேட்டோ கூட்டாளிகள் இடையே அரிதான பிளவை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா - ஐரோப்பா உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ளன.நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம், பிரித்தானியா - அமெரிக்க உறவுகள் எவ்வாறு முன்னேறும் என்பதற்கான முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது.
ஸ்டார்மர், ட்ரம்பின் கருத்துக்களை எதிர்த்து வலுவான நிலைப்பாடு எடுக்காவிட்டால், அவரது தலைமையின் மீது கேள்விகள் எழும் அபாயம் உள்ளது. இந்த சம்பவம், அமெரிக்கா - ஐரோப்பா இடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு மாறும் என்பதற்கான புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri