நானுஓயாவில் கொடூரமாக தாக்கப்பட்ட நாய்! பதைபதைக்க வைக்கும் காணொளி..
நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பில் நேற்றையதினம்(27) நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக தாக்கி இழுத்து பின்னர் ஆற்றில் வீசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
பொலிஸ் முறைபாடு
அதனை தொடர்ந்து நாயினை வளர்த்து வந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
கடந்த நாட்களில் நானுஓயாவில் சித்திரவதைக்கு உள்ளான நாய் அயலவர் வீட்டில் வளர்த்து வந்த பூனை ஒன்றினை கடித்ததாக தெரிவித்து பூனையை வளர்த்து வந்த வீட்டில் உள்ள இளைஞன் ஒருவன் குறித்த நாயை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.
இதன் பின்னர் கிடைக்கப் பெற்ற காணொளியை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் நாயை வளர்த்தவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பரவி வரும் காணொளி
அதன் பின்னர் பூனையை கடித்ததன் காரணமாகவே நாயினை அடித்ததாக சம்பந்தப்பட்ட இளைஞனும் முறைப்பாடொன்றை பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு சித்திரவதை செய்த நாய் தற்போது கால் ஒன்று உடைந்திருக்கிறது எனவும் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து பணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் நாயின் உரிமையாளருக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் நாயினை சித்திரவதை செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் நாயை தாக்கிய இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.







சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
