சிறையில் பிள்ளையானுக்கு நடப்பது என்ன! நீதிபதியின் திடீர் விஜயத்தின் பின்னணி
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினுடைய தலைவர் பிள்ளையானின் கைதின் பின்னர் என்ன இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்ற வினா எழுந்துள்ள சூழலில் பிள்ளையானை சந்திப்பதற்காக நீதிபதி ஒருவர் சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பிள்ளையான் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அரசாங்க தரப்பால் இந்த கைதிற்கான விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானிடம் பல தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் கோட்டை நீதவான் பிள்ளையான் உள்ளிட்ட 9பேரை விசாரிப்பதற்காகவே அங்கு சென்றிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
செல்வம் எம்.பி தொடர்பில் வெளியான மற்றுமொரு குரல்பதிவு! வீடுகளுக்கு தேடிச்சென்று அச்சுறுத்தும் கும்பல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |