தமிழர் தரப்பின் மோடிக்கான ஆவணம் கையளிக்கப்படவில்லை! - வெளியான தகவல்
இந்திய பிரதமருக்காக இன்று கைளிக்கப்படவிருந்த ஆவணம் பிரிதொரு தினத்தில் கையளிக்கப்படும் என தமிழ் பேசும் கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இந்த ஆவணம் கையளிக்கப் படுவதாக இருந்தபோதிலும் இந்திய உயர்ஸ்தானிகர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிக்க தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி இக்கடிதம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam