கார்தினால் மீது சேறு பூசக்கூடாது : சரத் பொன்சேகா
கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது சேறு பூசக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka ) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலளார்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சர்ச்சை நாடு முழுவதிலும் ஏற்பட்டது. அந்த சர்ச்சையின் உதவியில் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது.
எனினும், இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்பொழுது சிறு கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டாலும் மக்கள் பீதியடைகின்றனர்.
இந்தப் பின்னணியை தற்போதைய அரசாங்கமே உருவாக்கியது. அரசாங்கத்தினால் மக்களுக்கு பாதுகாப்பினை வழங்க முடியாது என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கார்தினால் உள்ளிட்ட அனைவரும் சிறிய விடயமொன்று தொடர்பிலும் பதற்றமடைகின்றனர்.
கார்தினாலின் குற்றச்சாட்டுக்களுக்கு சிலர் பதிலளிப்பதனை நாம் அவதானிக்கின்றோம்.
ஏட்டிக்கு போட்டியான பதில்களையே நாம் பார்க்கின்றோம்.
குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிப்பதனை விடவும் கார்தினாலுக்கு சேறு பூசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 13 மணி நேரம் முன்

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டதால் பல மில்லியன் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஜேர்மன் மாகாணம் ஒன்றிலிருந்து ஒலிக்கும் குரல் News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri
