இலங்கை கடற்பரப்பிற்குள் படகுகளுடன் நுழையாதீர்கள்! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

Indian fishermen Fishing Sri Lanka Sri Lanka Fisherman
By Ashik Oct 12, 2025 10:12 AM GMT
Report

நாட்டின் சட்டதிட்டங்களை மீறி தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்திய கடற்றொழிலாளர்கள் மனித நேயத்துடன் செயல் பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் இன்று  (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்கிஸ்ஸை நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! சட்டத்தரணிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

கல்கிஸ்ஸை நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! சட்டத்தரணிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

கைது

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் 47 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கைதுக்கு எதிராக இந்தியாவில் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் படகுகளுடன் நுழையாதீர்கள்! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Do Not Enter Sl Waters With Dangerous Boats

இன்று மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழிலாளர்களின் பெறுமதியான மீன்பிடி வலைகளை நாசம் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை இருக்கிறது.குறித்த இறையான்மையை யார் மீறு கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களுக்கிடையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது.பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய கடற்றொழில் சங்கங்கள் அல்லது மீனவ அமைப்புகள் கடைபிடிக்கவில்லை. அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நகை கடையொன்றில் தம்பதியினர் செய்த மோசமான செயல்: விசாரணையில் வெளியான தகவல்

நகை கடையொன்றில் தம்பதியினர் செய்த மோசமான செயல்: விசாரணையில் வெளியான தகவல்

சட்ட நடவடிக்கை

இன்று வரை எமது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.ஆனால் இந்திய எல்லைக்குள் வைத்தே அவர்கள் இலங்கை கடற்படை கைது செய்வதாக குற்றம் சுமத்துகிறார்கள்.

தயவு செய்து அரக்கத்தனமாக படகுகளுடன் எங்கள் கடல் எல்லைக்குள் நுழையாதீர்கள்.நாங்களும் இந்த கடலை நம்பி இருக்கிறோம்.எங்களையும் வாழ விடுங்கள்.கோடிக்கணக்கான பெறுமதியான கடல் வழங்களையும்,மீன்பிடி உபகரணங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

இலங்கை கடற்பரப்பிற்குள் படகுகளுடன் நுழையாதீர்கள்! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Do Not Enter Sl Waters With Dangerous Boats

உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது தான் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம்.எமது வாழ்வாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்கிறோம். கடற்றொழில் அமைச்சர் கூறியது போல் தயவு செய்து இலங்கை கடற்பரப்பில் வராதீர்கள்.

இலங்கை கடற்பரப்பில் நுழைந்தால் உங்களை கைது செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை.அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சருக்கும் , இலங்கை கடற் படைக்கும் நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் பிரம்படி படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் அனுஸ்டிப்பு

யாழ்.கொக்குவிலில் பிரம்படி படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் அனுஸ்டிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US