இலங்கை கடற்பரப்பிற்குள் படகுகளுடன் நுழையாதீர்கள்! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

Indian fishermen Fishing Sri Lanka Sri Lanka Fisherman
By Ashik Oct 12, 2025 10:12 AM GMT
Report

நாட்டின் சட்டதிட்டங்களை மீறி தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்திய கடற்றொழிலாளர்கள் மனித நேயத்துடன் செயல் பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் இன்று  (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்கிஸ்ஸை நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! சட்டத்தரணிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

கல்கிஸ்ஸை நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! சட்டத்தரணிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

கைது

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் 47 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கைதுக்கு எதிராக இந்தியாவில் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் படகுகளுடன் நுழையாதீர்கள்! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Do Not Enter Sl Waters With Dangerous Boats

இன்று மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழிலாளர்களின் பெறுமதியான மீன்பிடி வலைகளை நாசம் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை இருக்கிறது.குறித்த இறையான்மையை யார் மீறு கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களுக்கிடையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது.பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய கடற்றொழில் சங்கங்கள் அல்லது மீனவ அமைப்புகள் கடைபிடிக்கவில்லை. அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நகை கடையொன்றில் தம்பதியினர் செய்த மோசமான செயல்: விசாரணையில் வெளியான தகவல்

நகை கடையொன்றில் தம்பதியினர் செய்த மோசமான செயல்: விசாரணையில் வெளியான தகவல்

சட்ட நடவடிக்கை

இன்று வரை எமது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.ஆனால் இந்திய எல்லைக்குள் வைத்தே அவர்கள் இலங்கை கடற்படை கைது செய்வதாக குற்றம் சுமத்துகிறார்கள்.

தயவு செய்து அரக்கத்தனமாக படகுகளுடன் எங்கள் கடல் எல்லைக்குள் நுழையாதீர்கள்.நாங்களும் இந்த கடலை நம்பி இருக்கிறோம்.எங்களையும் வாழ விடுங்கள்.கோடிக்கணக்கான பெறுமதியான கடல் வழங்களையும்,மீன்பிடி உபகரணங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

இலங்கை கடற்பரப்பிற்குள் படகுகளுடன் நுழையாதீர்கள்! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Do Not Enter Sl Waters With Dangerous Boats

உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது தான் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம்.எமது வாழ்வாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்கிறோம். கடற்றொழில் அமைச்சர் கூறியது போல் தயவு செய்து இலங்கை கடற்பரப்பில் வராதீர்கள்.

இலங்கை கடற்பரப்பில் நுழைந்தால் உங்களை கைது செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை.அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சருக்கும் , இலங்கை கடற் படைக்கும் நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் பிரம்படி படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் அனுஸ்டிப்பு

யாழ்.கொக்குவிலில் பிரம்படி படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் அனுஸ்டிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US