முல்லைத்தீவு - அளம்பில் அந்தோணியார் ஆலயத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்
முல்லைத்தீவு மாவட்டம், அளம்பில் அந்தோணியார் ஆலயதிற்கு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் நேரடியாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அளம்பில் அந்தோணியார் ஆலயத்தின் பெருநாள் நாளையதினம் (12.06.2025) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விசேட பூஜை ஆராதனையுடன் ஆரம்பமாகி மறுநாள் (13.06.2025) அதிகாலை பெருநாள் ஆராதனையுடன் நிறைவடைய இருக்கின்றது.
கள விஜயம்
இந்நிலையில் இன்றையதினம்(11) மாலை குறித்த ஆலயத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் நேரடியாக விஜயம் செய்து ஆலயத்தின் சுற்றுச் சூழலைப் பார்வையிட்டதுடன் ஆலய குரு முதல்வரையும் ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஆலயத்தின் தேவைகளை ஆலய நிர்வாகத்தினர் அரசாங்க அதிபரிடம் எடுத்துக்கூறினர். இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர் "தங்கள் அவசியமான தேவைகளை பார்வையிட்டு புரிந்துகொண்டதாகவும் துறைசார்ந்த திணைக்களங்களிடம் தேவைப்பாடுகளை முன்வைத்து சில தீர்வுகளை படிப்படியாக பெற்றுத்தர முயல்வதாகவும்" தெரிவித்தார்.
குறித்த விஜயத்தின் போது மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஆலய நிர்வாகத்தினர் முதலானோர் கலந்துகொண்டனர்.

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
