கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து கடும் அதிருப்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் மிகவும் தளர்வான சுகாதார வழிகாட்டல்களே பின்பற்றப்பட்டு வருவதாகவும், பரிசோதனைகளை தவிர்த்து பயணிகள் வெளியேறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆபிரிக்க நாடுகளில் பதிவான ஒமிகோர்ன் திரிபு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாட்டை தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போக்கினை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் அவை மிகவும் மெத்தனப்போக்கில் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
இதனால் புதிய திரிபில் தாக்கப்பட்ட பயணிகள் எவரும் நாட்டுக்குள் பிரவேசிக்க கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஒமிகோர்ன் திரிபினை அடையாளம் காண முடியும் என உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri