கஞ்சனவினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணிநியமனம்
முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால்(Kanchana Wijesekera )பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கஞ்சன விஜேசேகர எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த ஜனவரியில் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பணிநியமனம்
அதன் காரணமாக மின்சார சபையின் செயற்பாடுகளில் பாரிய தடங்கல் ஏற்பட்டிருந்தது.பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இலங்கை மின்சார சபையை துண்டாடி தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டி குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய தொழிற்சங்க பிரமுகர்கள் 62 பேரை அப்போதைய அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணியிடை நீக்கம் செய்திருந்தார்.அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் (24) மின்சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி( Kumara Jayakody), குறித்த ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை இரத்துச் செய்து, அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
