ஜனாதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு! நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனு நேற்று(28.08.2024) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொய்யான தகவல்கள்
குறித்த மனு பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு அரசியலமைப்பின் 92 வது சரத்தை மீறுவதாகவும் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற கட்டணமாக 50,000 ரூபாய் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவிடப்டப்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
