காத்தான்குடியில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இராணுவத்தினர் தொடர்ச்சியான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் தடுப்பு மருந்துகளை தெளிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு,காத்தான்குடி நகரில் காத்தான்குடி நகரசபையுடன் இணைந்து கோவிட் கிருமிகளை அழிக்க தொற்று நீக்க மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
காத்தான்குடி நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பொதுமக்கள் கூடும் இடங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கைகளில் இராணுவ உயர் அதிகாரிகள்,காத்தான்குடி நகரசபை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பங்கெடுத்திருந்தனர். இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் தொற்று நீக்கும் செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.