தமிழ் அரசு கட்சியினரை சந்தித்த பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளர்
பிரித்தானிய தூதரகத்தின் முதல் செயலாளர் தொம் சோப்பர் மற்றும் அவர் தலைமையிலான குழுவினர் திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டப் பணிமனைக்கு விஜயம் செய்துள்ளனர்.
குறித்த விஜயமானது இன்று (09.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கல்கள்
இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நில ஆக்கிரமிப்பு சிக்கல்கள் ,வேலை வாய்ப்பு பிரச்சினைகள், பொருளாதார சிக்கல்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக திருகோணமலை மாவட்டத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களோடு ஏறத்தாழ ஒரு மணி நேரம் உரையாடி அறிந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |