விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! நான் மீண்டும் வருவேன் - டயானாவின் சபதம்
மிக விரைவில் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதன் பின்னர் நான் மீண்டும் அரசியலுக்குள் வருவேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நான் மீண்டும் வருவேன்
தொடர்நதும் தெரிவிக்கையில்,
எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. வெகு காலத்திற்குள் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்திருந்தது.
அதேவேளை, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்றைய ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தனது விளக்கத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
