திருகோணமலை மாவட்டத்தில் டெங்குநோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்
டெங்குநோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டமானது, நேற்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
உடனடி நடவடிக்கைகள்
டெங்கு சம்பந்தமாக தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் குறித்தும், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் (NDCU) சில நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டன.
எனவே, இந்தச் செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam