பதுளை மருத்துவமனையின் வைத்தியர் மீது தொடரும் ஒழுக்காற்று விசாரணை!
பதுளை மருத்துவமனையின் வைத்தியர் பாலித ராஜபக்ச, தமக்கு எதிராக பொது சேவை ஆணைக்குழு நேற்று (09) நடத்திய ஒழுக்காற்று விசாரணையின் இரண்டாவது நாளில் ஆறு மணி நேர வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் (8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அறிக்கை
2023 ஆம் ஆண்டில் மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டமை குறித்து உரிய விளக்கம் கோரி சுகாதார அமைச்சினால் இந்த ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டது.

தற்போது பொதுச் சேவை ஆணையக்குழுவினால் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மருத்துவர் அனைத்து பதவி உயர்வுகளையும் வெளிநாட்டு பயணங்களையும் இழந்துள்ளார்.
எல்ல-வெல்லவாய வீதியில் இராவண எல்ல அருகே சுமார் 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தில் காயமடைந்தவர்களை மீட்கப் இவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam