இலங்கை ஜனாதிபதி ரில்வினா..! நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam Tilvin silva Nalinda Jayatissa
By Rakesh Sep 10, 2025 03:05 AM GMT
Report

அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவே வெளியிடுகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முடிவுக்கு மாறான விடயங்களை அவர் அறிவிக்கின்றார். அதுவே அரசின் முடிவாக வெளிவருகின்றது. அப்படியானால் நாட்டின் ஜனாதிபதி ரில்வின் சில்வாவா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இலங்கை அரசு செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அங்கீகரிப்பதற்கான பிரேரணையின் மீது உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக் கேள்வி எழுப்பினார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரைக்கு ஆட்சேபம் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், செயலாளரும் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியை அவர் தமது உரையில் முழுமையாக வாசித்தார்.

கட்டாரை தாக்கிய இஸ்ரேல்.. ட்ரம்ப் வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு

கட்டாரை தாக்கிய இஸ்ரேல்.. ட்ரம்ப் வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு

ரில்வின்னா ஜனாதிபதி..

அதன் பின்னர் அவர் தமது உரையைத் தொடர்ந்தார்.

அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்ய முன்னர் தனது நாட்டின் மக்களுடன் இணக்கம் காண வேண்டும். இந்த அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. ஆனால், தன்னுடைய நாட்டின் பிரஜைகளான தமிழர்களுடன் ஓர் ஒப்பந்தத்துக்கு - இணக்கத்துக்கு - அது இன்னமும் வரவில்லை. மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அரசு தரப்பு ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வெளியிடுகின்றது.

இலங்கை ஜனாதிபதி ரில்வினா..! நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி | Sri Lanka Next President

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையை நான் சமர்ப்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அது தொடர்பின் அரசின் பதிலைக் கேட்டுக் களைத்து விட்டேன். பதில் கூறுவதில்லை என்று அரசு இழுத்தடிக்கின்றது.

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு முடிவதற்கு முன்னர் நடைபெறும் என்று ஜனாதிபதி கூறினார். முன்னைய - விலக்கப்பட்ட - பழைய - தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் என சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தத் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கத்தில் இடம்பெறாத - ரில்வின் சில்வாவோ எல்லை நிர்ணயப் பணி முடிந்த பின்னர்தான் மாகாண சபைத் தேர்தல்கள் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தார்.

இப்போது ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதையே கூறுகின்றார். அப்படியானால் நாட்டில் தீர்மானத்தை எடுக்கும் ஜனாதிபதி பதவியில் இருப்பவர் ரில்வின் சில்வாவா?" என்று சாணக்கியன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி..

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"16 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் மாறி, மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கான நீதியை மறுத்தமை போலவே இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசும் நீதியை மறுப்பதற்கான ஆரம்ப வேலையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் அமர்வில் வெளிவிவகார அமைச்சரின் உரையின் ஊடாகச் சொல்லி இருக்கின்றது.

இலங்கை ஜனாதிபதி ரில்வினா..! நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி | Sri Lanka Next President

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த நாட்டுக்குள் வெளிநாடுகள் அல்லது சர்வதேச நாடுகள் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனக் கூறியுள்ளார். இந்த நாட்டினுடைய அரசு, அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை, தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்ட சமூகமான தமிழ் மக்கள் ஓர் சர்வதேச விசாரணை வேண்டும், சர்வதேச தலையீடு வேண்டும், சர்வதேச மேற்பார்வை வேண்டும் என்றும், சர்வதேசத்தின் உதவியுடன்தான் உண்மைகள் கண்டறியப்படலாம், சர்வதேசத்தின் ஊடாகத்தான் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் மாறி, மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கான நீதியை மறுத்தமை போலவே இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நீதியை மறுக்கின்றமைக்கான ஆரம்ப வேலைகளை இந்த அமைச்சரின் உரையின் ஊடாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

நாட்டின் ஜனாதிபதி வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து மைதானங்களைத் திறந்து வைக்கலாம் அல்லது ஆரம்பித்து வைக்கலாம். அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கலாம். இதேபோன்றுதான் கடந்த காலத்தில் ராஜபக்‌ஷக்கள், மைத்திரி, ரணில் போன்ற அனைத்துத் தலைவர்களும் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்தார்கள்.

ஆனால், அந்த மக்களுடைய எதிர்பார்ப்பு, தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே நடந்த அநீதிக்கு, இனப் படுகொலைக்கு நீதி வேண்டும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அத்தோடு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும் என்பதுதான். மேற்படி விடயங்களை இந்த அரசாங்கம் மறுத்தால் தமிழ் மக்களின் எதிர்ப்பை இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூரில் அதிர்ச்சி தரும் ஆயுதங்கள்! ஹிஸ்புல்லா தப்பியது எப்படி - அதிரடி காட்டும் STF + CID

ஏறாவூரில் அதிர்ச்சி தரும் ஆயுதங்கள்! ஹிஸ்புல்லா தப்பியது எப்படி - அதிரடி காட்டும் STF + CID

மகிந்தவை நாம் இலக்கு வைக்கவில்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

மகிந்தவை நாம் இலக்கு வைக்கவில்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US