தேசபந்துவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையில் முன்னிலையான மூன்று சாட்சியங்கள்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவில் மேலும் மூன்று பேர் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று குறித்த மூன்று பேரும் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்கழு தலைவர் ஈ.டபிள்யூ.எம். லலித் ஏகநாயக்க ஆகியோர் அடங்கிய இந்தக் குழு நேற்று நாடாளுமன்றத்தில் கூடியது.
நீதிமன்ற சாட்சியம்
காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 11 ஆம் திகதி, நான்கு சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விசாரணைக் குழு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விசாரணைக் குழுவில் பங்கேற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா மற்றும் பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.எஸ். வீரவிக்ரம ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.