இந்திய விமான விபத்து விசாரணையில் சர்வதேச புலனாய்வாளர்கள்
இந்தியாவில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம் குறித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை நடவடிக்கைகளில் சர்வதேச புலனாய்வாளர்கள் ஈடுபடுவார்கள் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டபோது 242 பேரை ஏற்றிச் சென்றது.
பிற நாட்டு பயணிகள்
அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ, இந்தியா முன்னணி புலனாய்வாளராக இருக்கும் என்றும், ஆனால் மற்ற நாடுகளும் இந்த விசாரணையில் தொடர்பில் இருககும் என தெரிவித்துள்ளார்.
குறித்த விமானம் லண்டனுக்குச் செல்லவிருந்ததால், பிரித்தானிய மற்றும் விமானத்தில் இருந்த பிற நாடுகளும் விசாரணையில் பங்கேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.
போயிங் மற்றும் விமானத்தில் மின்னணுவியல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைத் தயாரித்த நிறுவனங்களும் இதில் ஈடுபட வாய்ப்புள்ளதாக ஷியாவோ தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
