சாகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! - மொட்டு கட்சியின் பங்காளிகள் தீர்மானம்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் செயற்பாடு ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது விடயம் குறித்து ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பையடுத்து, "வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப் பதவியைத் துறக்க வேண்டும்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று இன்று (13) அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உருவாக்கத்தில் அதிக பங்களிப்பைச் செலுத்தியவர்கள் என்ற ரீதியில் இந்த அரசில் எமக்கே அதிக உரிமைகள் உள்ளன. இந்த அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டுக்கொண்டுள்ளோம்.
ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு அரசைப் பலவீனப்படுத்துவது ஏன் என்பது குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் ஆராய வேண்டும்" என்று கட்சித் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அத்தோடு சாகர காரியவசம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பிரதமர்
பின்வாங்கக்கூடாது எனவும், சாகர காரியவசம் குறித்து உடனடியாக விசாரணை ஒன்றை
நடத்தி இதற்கான தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கப் பிரதமர் வலியுறுத்த
வேண்டும் எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri