சூரிச்-கட்டுநாயக்க இடையில் நேரடி விமான சேவை
சுவிஸர்லாந்தில் இருந்து புதிய விமான சேவையின் விமானம் ஒன்று சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது பயணமாக அந்த விமான சேவையின் விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சுவிஸர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் இந்த விமான சேவை நிறுவனம் நேரடியாக விமான போக்குவரத்தை நடத்தவுள்ளது.
125 பயணிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன் வந்த விமானம்

ஈடெல்வைஸ் விமான சேவை நிறுவனத்தின் W.K.068 என்ற விமானம் இன்று மதியம் 12.20க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்தில் 125 பயணிகளும் 15 விமான பணியாளர்களும் இலங்கை வந்துள்ளனர்.

இவர்களை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
வாரத்தில் ஒரு முறை நேரடி விமான சேவை

விமான நிலையத்தில், விமானத்தில் வந்த பயணிகளுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.
ஈடெல்வைஸ் விமான சேவை வாரத்தில் ஒருமுறை கட்டுநாயக்கவுக்கும் சூரிச்சுக்கும் இடையில் நேரடி விமான சேவையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam