கப்பலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து: மறுக்கும் மொட்டு எம் பி
அண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆடம்பரமான இரவு விருந்து என்ற செய்தியை இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மறுத்துள்ளார்.
இது கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட ஆய்வுப் பயணம் மாத்திரமே என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
அகழ்வாராய்ச்சி கப்பல்
அத்துடன் ஒரு உண்மையான விருந்தை நடத்த விரும்பினால், தாங்கள் அதை ஒரு ஆடம்பரமான கப்பலில் ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரு அகழ்வாராய்ச்சி கப்பலில் அல்ல என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு தளங்களை ஆய்வு செய்வதுடன் துறைமுகப் பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க விரும்பினர்.
இதனையடுத்து பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இந்த சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார் என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam
