கப்பலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து: மறுக்கும் மொட்டு எம் பி
அண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆடம்பரமான இரவு விருந்து என்ற செய்தியை இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மறுத்துள்ளார்.
இது கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட ஆய்வுப் பயணம் மாத்திரமே என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
அகழ்வாராய்ச்சி கப்பல்
அத்துடன் ஒரு உண்மையான விருந்தை நடத்த விரும்பினால், தாங்கள் அதை ஒரு ஆடம்பரமான கப்பலில் ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரு அகழ்வாராய்ச்சி கப்பலில் அல்ல என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு தளங்களை ஆய்வு செய்வதுடன் துறைமுகப் பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க விரும்பினர்.
இதனையடுத்து பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இந்த சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார் என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri