ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகவுள்ள இலங்கை வீரர்
காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க ஐபிஎல் தொடரின் முதல் சில வாரங்களில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.6 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
ரசிகர்களை கவலை
இந்நிலையில், உபாதை காரணமாக அவர் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |