கிளிநொச்சியில் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஏற்பாட்டில் "பாரம்பரியத்திற்கான டிஜிட்டல்" செயற்றிட்டத்தின் மூலம் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
வடக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் ப.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் சு.முரளிதரன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் வடக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் தாரகா பிறேம்ஆனந், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி அஜிதா பிரதீபன், பச்சிலைப்பள்ளி, கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.













உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 15 மணி நேரம் முன்

மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட் Cineulagam
