விநியோகிக்கப்படாத மூன்றரை இலட்சம் வாக்காளர் அட்டைகள்
பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் மூன்று இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் இன்று (14) மாலை வரை தபால் நிலையங்களில் தேங்கிக் கிடந்துள்ளன.
வாக்காளர்கள் உரிய முகவரிகளில் இருந்து வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தமை, வீடுகளில் இல்லாமை, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை போன்ற காரணங்களினால் குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள்
அவ்வாறான நிலையில் உரிய வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் இன்றைய தினம் தங்கள் பிரதேச தபால் அலுவலகங்களுக்கு வந்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும் இன்று மாலை வரை குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
