முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல்

Mullaitivu
By Uky(ஊகி) Sep 21, 2024 09:59 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் புலம்பெயர் தமிழர் ஒருவர் பிரதேச வாசிகளால் அச்சமூட்டப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அச்சமூட்டப்பட்ட அவர் தொடர்ந்து அவரது நட்பு வட்டாரத்தினரால் அச்சமூட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்த இவர் தன் முதுமைக் காலத்தில் தாயகம் திரும்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக அவருடன் உரையாடிய போது குறிப்பிட்டிருந்தார்.

வன்னி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்...

வன்னி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்...

சிலை வைக்கும் முயற்சி 

தன் விவசாய நிலத்தில் கமுகு, வாழை, மற்றும் பயன்தரு பழமரங்கள் உள்ளிட்ட விவசாயப் பயிர்களோடு அழகூட்டும் தாவரங்களையும் நாட்டி பராமரித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

அவ்விவசாய நிலத்தில் சிங்கமொன்றின் சிலையை நிறுவிக்கொள்ள விருப்பப்பட்டு அதற்கு முயற்சித்துள்ளார்.

முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல் | Diaspora Tamils Feared In Mullaithivi

தாயகத்தில் உள்ள தனது நட்பு வட்டத்துடன் இது தொடர்பில் கலந்தாலோசித்த போது சிங்கத்தின் சிலையை வைத்தால் தீவிர தமிழரசியல் ஆர்வலர்களால் சேதமாக்க வாய்ப்புள்ளது. அதனால் அதனை வைக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அப்படி என்றால், புலியொன்றின் சிலையை வைக்கலாம் என்ற அவரது அடுத்த தெரிவை முன்வைத்த போது அரச தீவிர ஆதரவாளர்கள் அதனை சேதமாக்க வாய்ப்பிருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலை வைப்பது தொடர்பில் தன் விருப்பத்திற்கேற்ப முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியாத சூழலினை தாயகத்தில் அவர் எதிர்கொண்டதனை அவருடனான உரையாடல் வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

வைக்கப்பட்ட சிலை

இறுதியில் எதுவும் வேண்டாம் என்ற முடிவிற்கு தள்ளப்பட்ட அவர் சிலை வைக்கும் முயற்சி தொடர்பில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்திருந்தார்.

முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல் | Diaspora Tamils Feared In Mullaithivi

யாராலும் தொல்லை தரமுடியாதபடி யானையொன்றின் சிலையை வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து யானையொன்றின் சிலையை விவசாய நிலத்தில் உள்ள மரமொன்னின் கீழ் வைத்துள்ளார்.

தமிழர் பாரம்பரியமும் சிலை வைப்பும்

தமிழர்களின் பாரம்பரியமான வாழ்வியல் அணுகுமுறைகளில் சிலை வைக்கும் இயல்பு தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. இன்றும் இது தொடர்கின்றது. வரவேற்பு வாசலில் இரு பக்கங்களிலும் சிலைகளை வைக்கும் பழக்கம் இருந்து வந்திருப்பதையும் அவதானிக்கலாம்.

இன்றும் ஈழத்தில் பல இடங்களில் தங்கள் வளவுகளில் பிரதான வாசல்களில் படுத்திருக்கும் நந்தியின் (எருத்து மாடு) சிலையை வைத்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.

முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல் | Diaspora Tamils Feared In Mullaithivi

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் வீடுகளுக்கு முன்னே கடற்கன்னியின் சிலை வைத்திருப்பதை அவதானிக்கலாம். உடலின் மேலரைப்பகுதி கன்னிப்பெண்ணின் உருவமும் கீழரைப்பகுதி மீனின் உருவமுமாக இருக்கும் தோற்றமே கடற்கன்னியாக உருவகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தின் பல இடங்களிலும் வீடுகளுக்கு முன்னே தங்களின் இறந்த மூத்தோரின் சிற்பங்களை நிறுவிக்கொண்டிருப்பதையும் இன்னும் சில இடங்களில் உயிரோடு இருக்கும் தங்கள் பெற்றோரின் சிற்பங்களை நிறுவி இருப்பதையும் அவதானிக்கலாம்.

எல்லா பாடசாலைகளிலும் சரஸ்வதியின் சிற்பம் இருப்பதையும் இங்கே இட்டுச் சொல்ல முடியும். தமிழர்களின் ஆலயங்களில் சிற்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதையும் இங்கே எடுத்துக் காட்டலாம்.

யானைக்கு வந்த ஆபத்து 

இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுள்ள இன்றைய சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக உள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.

சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட போதும் ஐ.தே.க வின் தலைவர் என்பதால் அவரை பொதுமக்கள் அவரது கட்சியின் சின்னமான யானையால் குறிப்பிட்டு விழிப்பதும் வழக்கமாக இருக்கின்றது.

முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல் | Diaspora Tamils Feared In Mullaithivi

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோற்க நேரிட்டால் யானைச் சிலையை அவரது ஆதரவாளர்கள் சேதமாக்கிவிடுவார்கள் என எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களாக பணியாற்றிவரும் சிலரே இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது

இவை அவர்களின் நட்பு வட்டத்தினுள்ளே பரிமாறிக்கொண்ட கருத்துக்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் அவை சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன என சமூகவியல் கற்றலாளர்கள் சிலருடன் இந்நிகழ்வு தொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிந்திக்கப்பட வேண்டியவை 

விளையாட்டகப் பேசிவிட்டுப் போகும் பல வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை கடந்து விட்டு போக முடியாத சந்தர்ப்பங்களும் இருப்பதை நோக்க வேண்டும்.

முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல் | Diaspora Tamils Feared In Mullaithivi

இதுவும் அதுபோல் ஒன்றாக இருக்கலாம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுபடுத்தக் கூடிய சொற்கள் மற்றும் பொருட்களை கையாள முடியாத சூழல் இலங்கையில் இருந்து வருகின்றது.

அது போலவே சிறந்த படைப்புக்களாக உள்ள விடுதலைப்புலிகளின் மொழிசார்ந்த மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம் சார்ந்த விடயங்களை ஈழத்தில் தமிழர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியாதளவுக்கு அச்சமூட்டப்பட்டிருக்கும் சூழல் இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.

மாவீரன் கர்ணன்

உதாரணமாக முச்சக்கர வண்டிக்குப் பின்னே எழுதப்பட்ட வாசகம் ஒன்று தொடர்பில் முல்லைத்தீவில் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அதனை அகற்றுமாறு பணிக்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றையும் இங்கு விபரித்தல் பொருத்தமாகும்.

தென்னிந்திய திரைப்படமான கர்ணனில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் வரும் ஒரு பாடலாக "கண்டா வரச்சொல்லுங்க" என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. படத்தின் கதாநாயகனாக கர்ணன் என்ற பாத்திரம் இடம்பெற்றிருந்தது. இதனையொட்டியே அவ் முச்சக்கர வண்டியின் பின் பகுதியில் மாவீரன் கர்ணன் என்ற சொற்றொடர் இடம் பெற்றிருந்தது.

முல்லைத்தீவில் அச்சமூட்டப்பட்ட புலம்பெயர் தமிழர்: சிலை மாற்றப்பட்ட போதும் தொடரும் அச்சுறுத்தல் | Diaspora Tamils Feared In Mullaithivi

பொலிஸாரால் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாலேயே முச்சக்கர வண்டி சாரதி எச்சரிக்கப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் போரில் இறக்கும் போது அவர்களை மாவீரர் அல்லது மாவீரன் என விழிப்பதை கருதியே இது அதுவாக இருக்கலாம் என உருவகிக்கப்பட்டிருந்தது என சமூகவியல் கற்றலாளர்கள் இது தொடர்பில் விளக்கியிருந்தனர்.

ஈழத்தமிழர்களை அச்சுறுத்தல்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டே தான் இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை.

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின...

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின...

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சிறப்பு நேரலை(Live)

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சிறப்பு நேரலை(Live)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US