புலம்பெயர் ஈழத்தமிழ் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பதற்றம்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
புலம்பெயர் தேசங்களில் ஏராளமான முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். பெருமளவிலான முதலீடுகளை செய்யும் போது அவர்களுக்கு ஒரு பதற்றம் இருப்பதாக பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் (kandiah baskaran) தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,''புலம்பெயர் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்வதற்கு பயப்படுகின்றனர்.காரணம் இலங்கையில் இருக்க கூடிய சூழல்.
இதனால் அரசாங்கத்துடன் இணங்கி முதலீடு செய்யக்கூடிய ஒரு யுக்தியை கையாளுகின்றனர்.
ஆனால் இன்றுவரை அரசாங்கத்தின் உதவியுடனோ அவர்களின் தயவுடனோ நான் எந்த முதலீட்டையும் செய்யவில்லை.
என்னுடைய பெரும்பாலான முதலீடுகள் வடக்கு கிழக்கில் இருக்க கூடிய எமது மக்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் இங்கு ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது.''என கூறினார்.
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri