டயானா கமகேவின் பதவி தொடர்பான விவகாரம்: உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ள மனு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான தீர்ப்பை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த மனுவையும் சமூக ஆர்வலர் ஒசாலா ஹோர்த் தாக்கல் செய்யவுள்ளார்.
எனினும் மற்றொரு சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக டயானா கமகே தெரிவித்துள்ளார்.
நீதியரசர்களின் மாறுபட்ட தீர்ப்பு
முன்னதாக மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வு, இராஜாங்க அமைச்சரின் வழக்கில் இரண்டு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியது, இரண்டு நீதியரசர்கள், அவர் நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வகிக்க தகுதியானவர் என்று அறிவித்தனர்.
எனினும் ஒரு நீதியரசர் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதியரசர் மரிக்கார் இந்த தீர்ப்பை வழங்கினார்.
அவரே, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, 2020இல் நாடாளுமன்ற உறுப்பினராக
பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற தீர்ப்பையும் வழங்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 11 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
