சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!
சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் முறைபடி பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் இஸ்தானா மாளிகையில் இன்று இரவு 08.00 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றுக் கொண்டார்.

பதவிக்காலம்
இந்த விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சிங்கப்பூரின் அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கமைய, சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் 2029 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri