தேசபந்து தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Law and Order Court of Appeal of Sri Lanka Deshabandu Tennakoon
By Rukshy Mar 20, 2025 09:40 AM GMT
Report

புதிய இணைப்பு

 முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  

மேலும் தேசபந்து தலைமறைவாகி இருந்த காலப்பகுதியில் உதவிய அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் பயன்படுத்திய அனைத்து இலத்திரனியல் உபகரணங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனோடு தேசபந்து தென்னக்கோனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாத்தறை சிறை அத்தியட்சகருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தேசபந்து 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்  மாத்தறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைக் கைதிகளை அழைத்து வரும் சிறைச்சாலை திணைக்கள வாகனத்தில் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுடைய வழக்கு விசாரணையோடு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகின்ற சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தற்போது மாத்தறை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

முதலாம் இணைப்பு 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (20) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டார்.

அநுரவின் முடிவுகளால் வெகுவிரைவில் கதிகலங்க போகும் தென்னிலங்கை

அநுரவின் முடிவுகளால் வெகுவிரைவில் கதிகலங்க போகும் தென்னிலங்கை

சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை

இந்தநிலையில், விளக்கமறியல் உத்தரவையடுத்து நேற்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.


அவருக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை மீதான முடிவு இன்று அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாத்தறை வெலிகமவில் பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொலை செய்யச் சதி செய்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 27 ஆம் திகதி அவரைக் கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டத்துறைக்கு அறிவிக்காமல்..

இந்தநிலையில், குறித்த உத்தரவுக்கு முன்னதாக, நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதியான, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், தலைமறைவாகி சரணடைந்துள்ள தென்னக்கோனுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Deshabandhu Tennakoon To Appear In Court Today

சந்தேக நபர், ஒரு ஆடம்பர பென்ஸ் சிற்றூந்தில் நீதிமன்ற வளாகத்திற்குள் அமர்ந்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைப் பெற்ற பின்னரே, தாம் இந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக முடிவு செய்தாக திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர், ஒரு ரகசிய பூனை போல நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். சட்டத்துறைக்கு அறிவிக்காமல் பிணை பெற முடியும் என்று நம்புகிறார் தாம் நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட, அவர் ஒரு இருக்கையில் முறையாக உடையணிந்து அமர்ந்திருந்தார்.

குற்றவாளியான அவர் எவ்வாறு இருக்கையில் அமர்ந்திருக்கமுடியும். அவர் தடுப்பில் அல்லவா இருக்கவேண்டும் என்று திலீப பீரிஸ் வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.

திரும்பப் பெறப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு

திரும்பப் பெறப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை!

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US