ராஜபக்சர்களின் முகவர்களாக செயற்படும் தேரர்கள்! அடாவடித்தனத்தை கண்டுக்கொள்ளாத பொலிஸார்
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்பட்டால் அவர் நல்லவர் என்று சில மதகுருமார்கள் நினைக்கின்றார்கள் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ராஜபக்சர்களுக்கு முகவர்களாக சில மதகுருமார்கள் இருக்கின்றார்கள். எனவே ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவும் எதிர்வரும் காலங்களில் அவர்கள் சிறை செல்லாமல் இருக்க இவர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.
வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் சிறுவனை சுட்டும் வீழ்த்தும் பொலிஸாரால் ஏன் அடாவடித்தனம் செய்யும் பௌத்த துறவிகளை நிறுத்த முடியவில்லை.
நீதி என்பது அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan