வங்களா விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடலில் (Bay of Bengal) உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவில் நேற்று (25) இரவு முதல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாட்டின் கிழக்கு கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பு
இந்நிலையில், கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்கள் மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தொடர்ந்து மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் காற்று வடகிழக்கு திசையில், மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அவ்வப்போது மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        