கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளரை பதவி நீக்குமாறு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிப்பு

East Demonstration department-of-health
By Independent Writer Jun 11, 2021 06:19 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ், கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தை அப்பதவியில் இருந்து நீக்குமாறு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தலைமையில் வாழைச்சேனை மருத்துவமனை விவகாரத்தை வைத்தும், தனது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதாக குறிப்பிட்ட ரவி குமுதேஷ், அதற்கெதிராக கிழக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இன்றைய தினம் கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் ஒருவர் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கும் புகைப்படங்களை வெளியிட முயற்சித்திருக்கின்றார்.

அதில் என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடும் வகையில் இதனை ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

கிழக்கு பிரதி சுகாதார பணிப்பாளர், அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மத்தியில் பிழையான கருத்தை வெளியிட்டுள்ளார். என்னால் வெளியிடப்பட்ட கருத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் திரிபுபடுத்தி அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குறித்த பிரதி பணிப்பாளருடன் வர்த்தகத்தில் ஈடுபடுவோரே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

விசேடமாக இனவாத கருத்தை ரவி குமுதேஷ் வெளியிட்டதாக கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்திருக்கும் கருத்தானது அவரது சொந்தக்கருத்தாகும்.

வாழைச்சேனை மருத்துவமனையிலுள்ள சிங்கள பணிக்குழாமுக்கு தமிழ் மொழியில் கடிதங்களை வழங்கி ஒழுக்காற்று அதிகார நடவடிக்கை என்பதை தெரிவித்து பழிவாங்குவதற்காக இவ்வாறு கிழக்கு சுகாதார பிரதிப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

குறித்த பணியாளர்களை சிரமத்திற்குள் தள்ளுவதற்காக அவர் இனம், மொழி என்பதை அவர் பயன்படுத்தியுள்ளார்.

எந்தவொரு தமிழ் அதிகாரிக்கும் சிங்கள மொழியில் கடிதம் வழங்கி தண்டனை மற்றும் உத்தரவுகளை வழங்குவதானது மிகவும் தவறாகும்.

அதேபோல சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் குறிப்பிட்டு தண்டனை அளிப்பதானது அதுவும் பிழையான விடயம்.

விசேடமாக தண்டனை அளிக்கின்றபோது அதற்கான காரணத்தை கோருவதற்கான சந்தர்ப்பமும் மறுக்கப்பட்டு கடிதமொன்றை வழங்குகின்ற கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளர், மாகாண ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கின்ற அதிகாரம் தம்மிடத்தில் இல்லை என்பதை மறந்துவிட்டார்.

அதனால் சுகாதார பணியாளர்களுக்கு ஒன்றைக் கூறுகின்றோம் மாகாண சபைகளிலுள்ள சில நிர்வாகம், நிறுவன கோவை தெரியாதவர்கள் பிரதி சுகாதாரப் பணிப்பாளர் கூறும் வகையில் செயற்பட வேண்டாம்.

சுகாதார செயலாளர் அல்லது அவருக்கு மேல் அதிகாரிகளுக்கே ஒழுக்காற்று சார்ந்த அதிகாரம் உள்ளது. குறைந்த பட்சம் அதனைக்கூட தெரிந்து வைத்திருக்காத பிரதி சுகாதார பணிப்பாளர் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று, தனக்கு தெரிந்த வகையில் விசாரணை செய்து, காரணம் கேட்காமல் தான்தோன்றித்தனமாக இடமாற்றங்களை வழங்க அதிகாரம் இல்லை.

அதனை தடுப்பதற்கு சொன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இதனைதடுக்கவும் முடியாது.

ஆகவே கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளரை வீட்டிற்கு அனுப்பும் வகையிலான ஆர்ப்பாட்டங்களை நாம் கிழக்கிலும் செய்ய முடியும்.

தற்போதும் இந்த பிரதி சுகாதாரப் பணிப்பாளர் செயற்படுகின்ற முறையானது மக்களின் ஐக்கியம் மற்றும் இனங்களுக்கு இடையிலான சமாதானத்திற்கு சீர்குலைவாகும்.

இன்று தமிழ் அதிகாரிகளுக்கு பொய்யான விடயத்தைக் கூறி இனவாத ரீதியிலான ஒன்றுக்காக வீதிகளில் அவர்களை அழைத்து வந்து, ஆர்ப்பாட்டம் செய்திருப்பது தவறான செயலாகும். அந்த அறிவித்தலும் பிழையானது.

அகவே இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு மாகாண அதிகாரிகளிடம் கேட்கின்றேன். நான் சிங்கள மொழியில் செய்த உரையை திரிபுபடுத்தி மாகாண சபைகளிலுள்ள அதிகாரிகள் ஊடாக இவ்வாறான செயற்பாட்டை நடத்தியிருப்பதன் ஊடாக மாகாண மட்டத்திலான ஐக்கியத்திற்கே சவாலாக அமைகிறது.

இந்த இனவாத ரீதியில் செயற்பட்டுள்ள கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அவரது செயற்பாட்டிற்கான முழு பொறுப்பையும் அவருக்கு மேலிடத்திலுள்ள அதிகாரிகளே ஏற்க வேண்டும்.

இல்லாவிட்டால் மாகாண சபை ஒற்றுமை, ஐக்கியத்திற்காக பிரதி சுகாதார பணிப்பாளரை நீக்கும் வரை போராட்டங்களை நடத்த வேண்டியேற்படும். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகளிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, பக்ரைன், Bahrain, Maryland, United States

25 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வேலணை 5ம் வட்டாரம், Markham, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

26 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கிளிநொச்சி, கொழும்பு

26 Dec, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US