தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது தொடர்பில் வெளியான தகவல்!
உள்ளூராட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடக் குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படுவதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி 75 வீதம் நிறைவடைந்துள்ளது.
அதற்கான செலவினமாக 150 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணைக்குழுவினால் 40 மில்லியன் ரூபா மட்டுமே அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அச்சக பணியாளர்கள்
முன்னதாக அச்சிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகளையும் மீண்டும் சரி பார்க்க வேண்டியிருப்பதாகவும் அதற்காக ஒரு வாரமளவில் அவகாசம் தேவைப்படுவதாகவும் அரசாங்க அச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறைந்த பட்சம் இன்னும் 20 மில்லியன் ரூபா அளவில் வழங்கப்பட்டால் மாத்திரமே எஞ்சியுள்ள அச்சிடும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே போன்று எதிர்வரும் நாட்களில் அச்சக பணியாளர்கள் விடுமுறை பெற்றுக் கொள்ளாமல் தொடர்ச்சியாக பணியாற்றினாலும் கூட அச்சிடும் பணிகளை முழுமையாக மேற்கொள்வதற்குக் குறைந்தது ஒரு மாத காலம் அவகாசம் தேவை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
