வாக்குச்சீட்டு அச்சிடுதல் தடைப்பட்டமைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டும்! பெபரல்
வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் நடவடிக்கை தடைப்பட்டமைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான செலவுகள் வழங்கப்படும் வரையில் அவற்றை அச்சிடுவதில்லை என்ற தீர்மானம் வரலாற்றில் முதல் தடவையாக எடுக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயாதீனத்தன்மை அற்றுப் போயுள்ள தேர்தல் ஆணைக்குழு நிதி
இதற்கு முன்னர் நடைபெற்ற அநேக தேர்தல்களின் போது அரச நிறுவனங்கள் தேர்தல் ஆணைக்குழுவுடன் சுமூகமாக செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிற்கொடுப்பனவு அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் நிதி சுயாதீனத்தன்மை அற்றுப் போயுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தால் எதிர்வரும் காலங்களில் ஆட்சி பீடம் ஏறும் அரசாங்கங்கள் இதனையே காரணம் காட்டி நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை ஒத்தி வைக்கும் சாத்தியம் உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
