இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம் - இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,416 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர இது தொடர்பான விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
பாதிப்பு விபரங்கள்
* மொத்த நோயாளர்கள்: 13,416 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* மரணங்கள்: டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
*அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள் - டெங்கு பரவல் நாடு முழுவதும் காணப்பட்டாலும், பின்வரும் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொழும்பு (முதலிடம்)
கம்பஹா (இரண்டாமிடம்)
காலி (மூன்றாமிடம்)
மாத்தறை (நான்காமிடம்)
இரத்தினபுரி (ஐந்தாமிடம்)
பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை
தற்போது நிலவும் வானிலை மற்றும் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழலைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் தகுதியுள்ள மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற வேண்டும்.
வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றி, நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri