யாழில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் டெங்கு அபாயம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது சுழலை நுளம்புகள் பரவாத வகையில் பாதுகாக்க வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள டெங்கு நோயாளிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 945 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன் இன்றைய தினம்(25) 40 டெங்கு நோயாளிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் விடுதி டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல்நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நூளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஒருவருக்கு காய்ச்சல் எற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது சால சிறந்தது" என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றையதினம்(25) குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




