பிரபல நடிகை வீட்டில் பணியாற்றி உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்பாட்டம்(Photos)
பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து பின்னர் உயிரிழந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜகுமாரிக்கு நீதி வேண்டும் என கோரி பொது மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பட்டமானது நேற்றையதினம் (01.06.2023) நுவரெலியா - கந்தப்பளை நகர மத்தியில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகத்தர்களான பி.அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்பாட்டம் முன்னெடுப்பு
இதன்போது உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் இராகலை போன்ற தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பொருளாதார சுமை
குடும்ப பொருளாதார சுமையை சுமந்து கொண்டு பதுளையில் இருந்து கொழும்பில் நடிகை சுதர்மா நித்திகுமாரியின் வீட்டில் பணியாளராக வேலை செய்து வந்த இந்த இளம் தாய் மீது திருட்டு குற்றம் சுமத்தி பொலிஸ் முறைப்பாடு செய்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணையில் மரணமடைந்துள்ளார்.
எனவே உயிரிழந்த இளம் தாயின் நியாயமற்ற மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




