முன்னாள் போராளிகள் அரசியல்மயப்பட வேண்டும்! ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் அழைப்பு!
முன்னாள் போராளிகள் அரசியல்மயப்பட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுவித்துள்ளார்.
இன்றைய தினம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவருமான வேந்தன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவம் வகிக்கும் அணைத்து இயக்கங்களும் அரசியல்மயப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கான அடக்குமுறைகள் மற்றும் அவர்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் 12000ற்கு மேற்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் வடக்கு கிழக்கு முழுவதும் காணப்படுகின்றனர்.

ஆனாலும் அவர்கள் இன்னும் பல அரசியல் அடக்கு முறைகள் மற்றும் புலனாய்வு துறையினரின் பின் தொடரும் தன்மைகள் தொடர்ந்து கொண்டுள்ளது இதனை நிறைவுக்கு கொண்டு வர அணைவரும் ஒன்றுனைந்து தமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும்.
அதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாக தந்துள்ளது ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியே ஆகும் பல கட்சிகளில் பல முன்னாள் போராளிகள் இருந்தாலும் அவர்கள் இன்னொருவருக்கான அரசியல் அங்கிகாரத்திற்காக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரே தெரிவாகவே காணப்படுகிறது.
அதனால், அனைத்து புனர்வாழ்வு பெற்ற போராளிகளும் ஓரணியில் திரண்டு தமக்கான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 15 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam