பௌத்த பிக்குகளுக்கு முன்னுரிமையின் கீழ் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை
பௌத்த பிக்குகள் சமூக மற்றும் மத விடயங்களில் தவறாமல் ஈடுபடுவதால் சிறப்பு முன்னுரிமையின் கீழ் அவர்களின் தடுப்பூசியை வழங்குமாறு அஸ்கிரிய தலைமை செயலாளர் மெதகம தம்மாநந்த தேரர் கோரியுள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தடுப்பூசி பட்டியலை இதற்கமைய செயல்படுத்துமாறு புத்த சசனா அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டார்.
தற்போது பல பௌத்த பிக்குகள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மாநந்த தேரர் கூறினார்.
எனவே புத்த சாசனத்தைப் பாதுகாக்கப் பொருத்தமான வயது வரம்புகளைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.