திட்டமிட்ட முடிவு தலைவலியாக மாறியது: தீர்மானத்தை கைவிட்டு மாற்று வழியை கையிலெடுத்த கோட்டாபய
புதிய வருடத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அமைச்சரவை மறுசீரமைப்பை கைவிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தீர்மானித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மட்டுமல்லாது ராஜாங்க அமைச்சர்கள் தமது உயர் அமைச்சு பதவிகளை வழங்குமாறு தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சில அமைச்சர்கள் மூன்றாவது தரப்பின் ஊடாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது தலைவலியாக அதிகரித்ததால், ராஜபக்சவினர் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன் இதன் போது அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், நிறுவனங்கள் தொடர்பாக மாத்திரம் மாற்றங்களை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
என் நாட்டைவிட்டு வெளியே போ... கனடாவில் இனவெறுப்புத் தாக்குதலுக்குள்ளான சீக்கிய முதியவர் News Lankasri