எரிவாயுவின் விலையை 1200 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை
சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிற்ரோ பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வை முழுமையாக பெறவில்லை என்றால், திறைச்சேரி முழுமையான விலை மாற்றத்தை ஏற்க வேண்டும் என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை இன்று 800 டொலராக உயர்ந்துள்ளதாக லிற்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் அடங்கிய கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனை நேரடியாக 12.5 கிலோ கிராம் எரிவாயுடன் மாற்றும் போது 2021 ரூபாயாகும். எப்படியிருப்பினும் இன்று வரையில் 12.5 கிலோ கிராம் சிலின்டர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கப்பல் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் நேரடி செலவுகளின் தொகை 700 ரூபாயாகும். செலவை மாத்திரம் ஈடுசெய்ய ஒரு எரிவாயு சிலிண்டரை 2,800 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
