கைதான தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு, புதுச்சேரிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது
இதன்படி, கடந்த 28ஆம் திகதி அதிகாலை 2.40 மணியளவில் இலங்கை கடற்படையால் இந்திய கடற்றொழிலாளர்கள் 12பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 10 பேர் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர் தமிழக கடற்றொழிலாளர்கள் என்றும் வைத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு, கடற்றொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்று வைத்தியலிங்கம் கோரியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam