ஆசிரிய சேவைக்கு ஆட்சேர்ப்பு குறித்து வெளியான தகவல்
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல வழக்கு நடவடிக்கைகள்
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுப் பணியில் உள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் பல வழக்கு நடவடிக்கைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு இன்னும் முடிவடையாததால், அந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மேற்குறிப்பிட்ட பரீட்சை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri