இஸ்ரேலிலிருந்து 32 நாடுகளுக்கு பறந்த கடிதம்
ஈரானுக்கு பெரும்பாலான நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 32 நாடுகளுக்கு இன்று கடிதங்களை அனுப்பியதாகவும் ஈரானிய ஏவுகணை திட்டத்திற்கு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் உலகின் முன்னணி நபர்களுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரானின் இராணுவப்படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கை
மேலும் ஈரானின் இந்த தாக்குதல் தீவிரமாவதற்கு முன்னர் நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் ஈரான்-இஸ்ரேல் போர் அச்சுறுத்தல் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் "நாங்கள் குன்றின் விளிம்பில் இருக்கிறோம், நாங்கள் அதிலிருந்து விலகிச் பின்னோக்கிச்செல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் ஆகியோர் இதேபோன்ற முறையீடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
