நூற்றுக்கு அதிகமானோர் இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்கு
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் டெல்டா மாறுபாடு தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற மாதிரி சோதனையில் இந்த அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா மாறுபாடு ஆபத்தான வீதத்தில் கொழும்பில் பரவி வருவதாகவும் ஜீவந்தர எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட 75%க்கும் அதிகமான நோயாளிகள் சார்ஸ் கோவிட் 2இன் மிகவும் பரவக்கூடிய மாறுபட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
