உலகின் ஆபத்தான மாறுபாடாக கருதப்படும் டெல்டா மாறுபாடு
இலங்கையில் இந்திய மாறுபாட்டைக் கண்டறிந்த பின்னர் கோவிட் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாப்பை பெற எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் செலுத்துவது முக்கியமானது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஒருவருக்கு கடுமையான சிக்கல்கள் அல்லது மரண பாதிப்பு ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.
முகக்கவசங்களை சரியாக அணிவது, சமூக தூரத்தை பராமரித்தல் மற்றும் தவறாமல் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதும் மிக முக்கியம் என்று அவர் கூறினார்.
டெல்டா மாறுபாடு உலகின் மிகவும் ஆபத்தான மாறுபாடாக கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்திய, தென்னாப்பிரிக்க, பிரேசிலிய மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நான்கு வகைகள் மாறுபாடுகள் அதிக பரவும் வகை மாறுபாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
எனினும் , சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதுடன், இரண்டு தடுப்பூசிகளைப் பெறுவதன் மூலம் எந்தவொரு மாறுபாட்டிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று பேராசிரியர் மாலவிகே கோடிட்டுக்காட்டியுள்ளார்.
ஒருவர் கோவிட் தடுப்பூசியைப் பெற்றதும், அது சம்பந்தப்பட்டவரை பாதுகாக்கிறது.ஆனால் மற்றவர்களை அல்ல. எனவே, சமூக தூரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தடுப்பூசி மற்றும் சுகாதார நடைமுறைகள்தொற்றின் எந்த
வகைகளிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும் என்பதால், மக்கள் பீதியடைய வேண்டாம்
என்றும் சுகாதார மேம்பாட்டு பணியக பணிப்பாளர் ரஞ்சித் படுவந்துடவ கோரியுள்ளார்.