எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டோம்..! ஈரானுக்குத் திரும்பியதும் வெளியான அதிரடி அறிக்கை
எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டோம் என ஈரானிய தூதுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளின் தலைவராக இருந்தவரும், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃப், ஈரானுக்குத் திரும்பியதும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஈரான் அடிபணியாது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், இத்தகைய அச்சுறுத்தல்கள் ஈரானியர்கள் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும், “அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து ஈரான் அடிபணியாது” என்றும் கூறியுள்ளார்.

ஈரானிய ஊடகங்களின் செய்திகளின்படி, காலிபாஃப் ட்ரம்பை நோக்கி, “நீங்கள் சண்டையிட்டால், நாங்கள் சண்டையிடுவோம்; நீங்கள் தர்க்கரீதியாக முன்வந்தால், நாங்கள் தர்க்கரீதியாகப் பதிலளிப்போம்” என்று கூறியுள்ளார்.
நாங்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டோம். அவர்கள் எங்கள் உறுதியை மீண்டும் ஒருமுறை சோதித்தால், அவர்களுக்கு இதைவிடப் பெரிய பாடம் புகட்டுவோம்.
அமெரிக்கா பேச்சுவார்த்தை
தனது உரையின் மற்றொரு பகுதியில் காலிபாஃப், "தாங்கள் அமெரிக்கர்களை நம்பவில்லை" என்று தெஹ்ரான் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்ததாகவும், ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் பேச்சுவார்த்தைகளின்போது அவர்கள் ஈரானை இருமுறை தாக்கியதால், ஈரானின் நம்பிக்கையை அவர்கள் "சம்பாதிக்க" வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி 28 அன்று தொடங்கிய போரும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரும், ஈரானின் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் அணுசக்தித் திட்டம் குறித்து ஈரானும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri