தெஹிவளை துப்பாக்கிச் சூடு: வெளியான அதிர்ச்சி தகவல்கள்
தெஹிவளையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பிரபல போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதாவின் மைத்துனர் என்று தெரிய வந்துள்ளது.
வெலே சுதாவின் மைத்துனரான பஸ் அசித என்றழைக்கப்படும் ரஜ்கல் கொடகே சுதத் குமார என்பவரே இன்று(18) மாலை இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
அவர் தற்போது களுபோவிலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகர்
காயமடைந்த சுதத் குமாரவின் மைத்துனரான வெலே சுதா தற்போது மரண தண்டனைக் கைதியாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சுதத் குமாரவின் இன்னொரு நெருங்கிய உறவினரான படோவிட அசங்க தற்போது கல்கிசை பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகராக செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
