இலுப்பைக் கடவை பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு - மக்கள் விசனம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பறங்கிக்கமம் பகுதியை அண்டிய பகுதியில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும், பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும் அபகரிக்கப்படுவதாகவும் பறங்கிக் கமத்தை சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யுத்தம் காரணமாக பலமுறை இடப்பெயர்வுகளைச் சந்தித்த தங்களுக்கு அரசாங்கத்தினால் விவசாயம் செய்வதற்கு என இரு ஏக்கர் விவசாய காணிகள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தாங்கள் விண்ணப்பித்ததாகவும், விண்ணப்பித்த தங்களுக்கு வரவில்லை எனவும், தங்கள் பிள்ளைக்கு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் பிள்ளை வயல் செய்யவோ, தோட்டம் செய்யவோ இதுவரை காணி வழங்கப்படவில்லை எனவும் பறங்கிக்கமத்தை சேர்ந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க வயல் செய்யக் காணி வழங்கா விட்டாலும் வாழ்வதற்கே தற்போது காணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பறங்கிக்கமம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்கள் சொந்த பகுதியில் இல்லாமல் வெளி நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு தமது பகுதிக்கு அருகில் உள்ள காணிகளை வழங்குவதாகவும் எனினும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு காணியைப் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இலுப்பைக் கடவை மற்றும் கள்ளியடி பகுதியில் சட்டவிரோதமாக பல ஏக்கர் காணிகள் அடாத்தாகப் பிடிக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே விரைவில் உரிய அதிகாரிகள் நிறுவனங்கள் தலையிட்டுக் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த காடழிப்பு மற்றும் காணி அபகரிப்பு தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரனிடம் வினவிய போது,
குறித்த காடுகள் அழிக்கப்படும் விடயம் தொடர்பாக வன வள திணைக்களமே கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் காணிகளுக்கோ, காடழிப்புக்கோ எந்த அனுமதியும் வழங்கவில்லை.
காடுகள் அழிக்கப்படும் இடங்களில் நபர்களை எச்சரித்துள்ளதுடன், அழிக்கப்படும் இடங்களில் எச்சரிக்கை பதாதைகளை பிரதேச செயலகம் காட்சிப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
